நூல்கள்›நற்றிணை›பாடல் 1698

பாடல் 1698

கபிலர்

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,

கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,

கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு

ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?

நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த . . . .

வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய

பசலை பாய்தரு நுதலும், நோக்கி,

வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி,

வெய்ய உயிர்த்தனள் யாயே

ஐய! - அஞ்சினம், அளியம் யாமே! . . . .

குறிஞ்சி

← பாடல் 1697பாடல் 1699 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்