நூல்கள்›நற்றிணை›பாடல் 1697

பாடல் 1697

நக்கீரர்

கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை

நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,

கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு

சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்

கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் . . . .

மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி

மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின்

குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்

தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை

இளையரும் சூடி வந்தனர்: நமரும் . . . .

விரி உளை நன் மாக் கடைஇ,

பரியாது வருவர், இப் பனி படு நாளே.

முல்லை

← பாடல் 1696பாடல் 1698 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்