நூல்கள்›நற்றிணை›பாடல் 1694

பாடல் 1694

கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்

சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்

மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,

ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,

பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,

இன்ன சில் நாள் கழியின், பல் நாள் . . . .

வாழலென் வாழி - தோழி! - ஊழின்

உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்

ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,

பல் ஆ தந்த கல்லாக் கோவலர்

கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப . . . .

உயிர் செலத் துனைதரும் மாலை,

செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.

முல்லை

← பாடல் 1693பாடல் 1695 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்