நூல்கள்›நற்றிணை›பாடல் 1691

பாடல் 1691

மதுரைப் பேராலவாயர்

சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி

தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;

விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,

படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,

நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப . . . .

மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்

தந்தன நெடுந்தகை தேரே; என்றும்

அரும் படர் அகல நீக்கி,

விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே.

முல்லை

← பாடல் 1690பாடல் 1692 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்