நூல்கள்›நற்றிணை›பாடல் 1679

பாடல் 1679

மிளை கிழான் நல்வேட்டனார்

கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,

கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,

கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,

புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு

வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் . . . .

பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,

ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத

பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல,

பின்னிலை முனியா நம்வயின்,

என் என நினையும்கொல், பரதவர் மகளே? . . . .

நெய்தல்

← பாடல் 1678பாடல் 1680 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்