நூல்கள்›நற்றிணை›பாடல் 1678

பாடல் 1678

வெள்ளி வீதியார்

நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,

பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;

ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,

கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;

கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் . . . .

தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;

யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு

கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:

அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?

உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? . . . .

நெய்தல்

← பாடல் 1677பாடல் 1679 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்