நூல்கள்›நற்றிணை›பாடல் 1674

பாடல் 1674

மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்

அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட

மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்

இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்

காவல் கண்ணினம்ஆயின் - ஆயிழை!

நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை . . . .

ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்

சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,

செல்வன் செல்லும்கொல் தானே - உயர் வரைப்

பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி

களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து . . . .

செந் தினை உணங்கல் தொகுக்கும்,

இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?

குறிஞ்சி

← பாடல் 1673பாடல் 1675 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்