நூல்கள்›நற்றிணை›பாடல் 1675

பாடல் 1675

நம்பி குட்டுவனார்

கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்

நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,

உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,

சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,

வெளிய விரியும் துறைவ! என்றும் . . . .

அளிய பெரிய கேண்மை நும் போல்,

சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்

தேறா நெஞ்சம் கையறுபு வாட,

நீடின்று விரும்பார் ஆயின்,

வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தௌவே! . . . .

நெய்தல்

← பாடல் 1674பாடல் 1676 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்