நூல்கள்›நற்றிணை›பாடல் 1673

பாடல் 1673

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்

முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி

அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்

தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்

நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,

உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை . . . .

புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,

படையொடு வந்த பையுள் மாலை

இல்லைகொல் வாழி - தோழி! - நத்துறந்து

அரும் பொருட் கூட்டம் வேண்டிப்

பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? . . . .

பாலை

← பாடல் 1672பாடல் 1674 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்