நூல்கள்›நற்றிணை›பாடல் 1671

பாடல் 1671

மதுரை மருதன் இளநாகனார்

வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,

செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்

விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,

அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்

குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் . . . .

துணை நன்கு உடையள், மடந்தை: யாமே

வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,

நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு

வேறு புல வாடை அலைப்ப,

துணை இலேம், தமியேம், பாசறையேமே . . . .

குறிஞ்சி

← பாடல் 1670பாடல் 1672 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்