நூல்கள்›நற்றிணை›பாடல் 1666

பாடல் 1666

கபிலர்

பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு

கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,

கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,

வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,

புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி . . . .

குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!

உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்

இரவின் அஞ்சாய்; அஞ்சுவல் - அரவின்

ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,

இரை தேர் எண்கினம் அகழும் . . . .

வரை சேர் சிறு நெறி வாராதீமே!

குறிஞ்சி

← பாடல் 1665பாடல் 1667 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்