நூல்கள்›நற்றிணை›பாடல் 1665

பாடல் 1665

வெள்ளிவீதியார்

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்

பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;

ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்

பல் பூங் கானல் முள் இலைத் தாழை

சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ . . . .

வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு

மை இரும் பனைமிசைப் பைதல உயவும்

அன்றிலும் என்புற நரலும்; அன்றி,

விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்

யாமம் உய்யாமை நின்றன்று; . . . .

காமம் பெரிதே; களைஞரோ இலரே!

நெய்தல்

← பாடல் 1664பாடல் 1666 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்