நூல்கள்›நற்றிணை›பாடல் 1664

பாடல் 1664

ஆசிரியர் அறியப்படவில்லை

கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை

பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,

ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை

வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,

கலையொடு திளைக்கும் வரைஅக நாடன் . . . .

மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,

அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;

மின்னு வசி விளக்கத்து வருமெனின்,

என்னோ - தோழி! - நம் இன் உயிர் நிலையே?

குறிஞ்சி

← பாடல் 1663பாடல் 1665 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்