நூல்கள்›நற்றிணை›பாடல் 1663

பாடல் 1663

கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்

மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,

கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்

பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,

பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்

சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து . . . .

உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,

அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து,

திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்;

நீங்குகமாதோ நின் அவலம் - ஓங்குமிசை,

உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி . . . .

நயவரு குரல பல்லி,

நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே.

பாலை

← பாடல் 1662பாடல் 1664 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்