நூல்கள்›நற்றிணை›பாடல் 1661

பாடல் 1661

உலோச்சனார்

உவர் விளை உப்பின் உழாஅ உழவர்

ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,

கானல் இட்ட காவற் குப்பை,

புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,

மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி . . . .

'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என

வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்

திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!

இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;

இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் . . . .

பிறர் பிறர் அறிதல் யாவது

தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

நெய்தல்

← பாடல் 1660பாடல் 1662 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்