நூல்கள்›நற்றிணை›பாடல் 1660

பாடல் 1660

ஆலங்குடி வங்கனார்

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,

மட நடை நாரைப் பல் இனம் இரிய,

நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,

நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை

இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் . . . .

யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை

எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்

புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும்,

பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,

நன்றி சான்ற கற்பொடு . . . .

எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.

மருதம்

← பாடல் 1659பாடல் 1661 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்