நூல்கள்›நற்றிணை›பாடல் 1659

பாடல் 1659

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

வரையா நயவினர் நிரையம் பேணார்,

கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்

இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,

புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு

இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி . . . .

செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்

ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,

அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து

அல்கலர் வாழி - தோழி! - உதுக் காண்:

இரு விசும்பு அதிர மின்னி . . . .

கருவி மா மழை கடல் முகந்தனவே!

பாலை

← பாடல் 1658பாடல் 1660 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்