நூல்கள்›நற்றிணை›பாடல் 1657

பாடல் 1657

அம்மூவனார்

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,

பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்

சாதலும் இனிதே - காதல்அம் தோழி!

அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர்

கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து . . . .

உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய

தாயம் ஆகலும் உரித்தே - போது அவிழ்

புன்னை ஓங்கிய கானற்

தண்ணம் துறைவன் சாயல் மார்பே.

நெய்தல்

← பாடல் 1656பாடல் 1658 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்