நூல்கள்›நற்றிணை›பாடல் 1654

பாடல் 1654

கயமனார்

அந்தோ! தானே அளியள் தாயே;

நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,

பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?

கோடு முற்று யானை காடுடன் நிறைதர,

நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் . . . .

செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,

ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,

அம் சில் ஓதி இவள் உறும்

பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!

குறிஞ்சி

← பாடல் 1653பாடல் 1655 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்