நூல்கள்›நற்றிணை›பாடல் 1648

பாடல் 1648

பாலை பாடிய பெருங் கடுங்கோ

நினைத்தலும் நினைதிரோ - ஐய! அன்று நாம்

பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த

பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,

நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,

ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை . . . .

பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்

ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,

என்றூழ் விடர் அகம் சிலம்ப,

புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?

பாலை

← பாடல் 1647பாடல் 1649 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்