நூல்கள்›நற்றிணை›பாடல் 1645

பாடல் 1645

அம்மூவனார்

ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,

பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,

மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,

நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்

புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு . . . .

நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ

ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்

முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்

விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்

தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல் . . . .

ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,

மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.

நெய்தல்

← பாடல் 1644பாடல் 1646 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்