நூல்கள்›நற்றிணை›பாடல் 1644

பாடல் 1644

முப்பேர் நாகனார்

'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;

வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;

மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி

நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,

குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் . . . .

கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்

கழிவதாக, கங்குல்' என்று

தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய

நொடி விடுவன்ன காய் விடு கள்ளி

அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் . . . .

புன் புறா வீழ் பெடைப் பயிரும்

என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!

பாலை

← பாடல் 1643பாடல் 1645 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்