பாடல் 1643
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு . . . .
யாங்கு ஆகுவம்கொல்? - தோழி! - காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் - தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா . . . .
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.
குறிஞ்சி