நூல்கள்›நற்றிணை›பாடல் 1641

பாடல் 1641

உலோச்சனார்

பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,

இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:

வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,

இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,

அழியா மரபின் நம் மூதூர் நன்றே . . . .

கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,

சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;

ஒன்றே - தோழி! - நம் கானலது பழியே:

கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,

இருங் களிப் பிரசம் ஊத, அவர் . . . .

நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

நெய்தல்

← பாடல் 1640பாடல் 1642 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்