நூல்கள்›நற்றிணை›பாடல் 1638

பாடல் 1638

எயினந்தை மகன் இளங்கீரனார்

செல விரைவுற்ற அரவம் போற்றி,

மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை

யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,

வேண்டாமையின் மென்மெல வந்து,

வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி . . . .

வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்

பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,

ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,

ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்

பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் . . . .

பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

பாலை

← பாடல் 1637பாடல் 1639 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்