நூல்கள்›நற்றிணை›பாடல் 1636

பாடல் 1636

உரோடோகத்துக் கந்தரத்தனார்

தந்தை வித்திய மென் தினை பைபயச்

சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ

'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என,

நல்ல இனிய கூறி, மெல்லக்

கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் . . . .

சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி

விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,

பைதல் ஒரு நிலை காண வைகல்

யாங்கு வருவதுகொல்லோ - தீம் சொல்

செறி தோட்டு எல் வளைக் குறுமகள் . . . .

சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

குறிஞ்சி

← பாடல் 1635பாடல் 1637 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்