நூல்கள்›நற்றிணை›பாடல் 1635

பாடல் 1635

கயமனார்

வரி அணி பந்தும், வாடிய வயலையும்,

மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,

கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,

தமியே கண்ட தண்டலையும் தெறுவர,

நோய் ஆகின்றே - மகளை! - நின் தோழி . . . .

எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை

வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி,

உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,

இலங்கு இலை வெள் வேல் விடலையை

விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே . . . .

பாலை

← பாடல் 1634பாடல் 1636 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்