நூல்கள்›நற்றிணை›பாடல் 1634

பாடல் 1634

மாறோக்கத்து நப்பசலையார்

வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,

சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,

வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்

நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்

புணரின், புணருமார் எழிலே; பிரியின் . . . .

மணி மிடை பொன்னின் மாமை சாய, என்

அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,

அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,

இன்பமும் துன்பமும் உடைத்தே,

தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே . . . .

குறிஞ்சி

← பாடல் 1633பாடல் 1635 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்