நூல்கள்›நற்றிணை›பாடல் 1633

பாடல் 1633

மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,

கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;

தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை

மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்

துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும் . . . .

'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,

நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது

உண்டுகொல்? - வாழி, தோழி! - தெண் கடல்

வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்

கொடு முடி அவ் வலை பரியப் போக்கி . . . .

கடு முரண் எறி சுறா வழங்கும்

நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.

நெய்தல்

← பாடல் 1632பாடல் 1634 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்