நூல்கள்›நற்றிணை›பாடல் 1625

பாடல் 1625

அவ்வையார்

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,

புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்

ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள்,

அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,

வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, . . . .

பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை,

கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம்

இள நலம் இற்கடை ஒழியச்

சேறும்; வாழியோ! முதிர்கம் யாமே.

நெய்தல்

← பாடல் 1624பாடல் 1626 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்