நூல்கள்›நற்றிணை›பாடல் 1620

பாடல் 1620

மதுரை மருதன் இளநாகனார்

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்

தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்

கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! . . . .

நீயே பெரு நலத்தையே; அவனே,

'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,

தண் கமழ் புது மலர் ஊதும்

வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே.

மருதம்

← பாடல் 1619பாடல் 1621 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்