நூல்கள்›நற்றிணை›பாடல் 1619

பாடல் 1619

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

அம்ம வாழி, தோழி! - காதலர்,

நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய

சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்

நளி கடல் முகந்து, செறிதக இருளி,

கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி, . . . .

கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,

கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய

பெரு மர ஒடியல் போல,

அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.

முல்லை

← பாடல் 1618பாடல் 1620 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்