பாடல் 1617
உலோச்சனார்
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
நல் எயிலுடையோர் உடையம்' என்னும்
பெருந் தகை மறவன் போல - கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன், . . . .
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
'தேர் மணித் தௌ இசைகொல்?' என, . . . .
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.
நெய்தல்