நூல்கள்›நற்றிணை›பாடல் 1615

பாடல் 1615

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்

இரவின் வருதல் அன்றியும் - உரவுக் கணை

வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,

உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,

மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, . . . .

வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட

நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்

குன்ற நாடன் கேண்மை நமக்கே

நன்றால் வாழி - தோழி! - என்றும்,

அயலோர் அம்பலின் அகலான், . . . .

பகலின் வரூஉம், எறி புனத்தானே.

குறிஞ்சி

← பாடல் 1614பாடல் 1616 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்