நூல்கள்›நற்றிணை›பாடல் 1612

பாடல் 1612

நல்லூர்ச் சிறு மேதாவியார்

தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,

கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,

நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்

காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,

அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் . . . .

கிளவியின் தணியின், நன்றுமன் - சாரல்

அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,

ஆடு மழை மங்குலின், மறைக்கும்

நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?

குறிஞ்சி

← பாடல் 1611பாடல் 1613 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்