நூல்கள்›நற்றிணை›பாடல் 1607

பாடல் 1607

தும்பி சேர் கீரனார்

கொடியை; வாழி - தும்பி! - இந் நோய்

படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;

மெய்யே கருமை அன்றியும், செவ்வன்

அறிவும் கரிதோ - அறனிலோய்! - நினக்கே?

மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை . . . .

நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய

தாறு படு பீரம் ஊதி, வேறுபட

நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்:

சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்

நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், . . . .

வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு

என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.

பாலை

← பாடல் 1606பாடல் 1608 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்