நூல்கள்›நற்றிணை›பாடல் 1606

பாடல் 1606

தொல் கபிலர்

'கோடு துவையா, கோள் வாய் நாயொடு

காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு

வயவர் மகளிர்' என்றிஆயின்,

குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;

சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் . . . .

கான மஞ்ஞை கட்சி சேக்கும்

கல் அகத்தது எம் ஊரே; செல்லாது

சேந்தனை, சென்மதி நீயே - பெரு மலை

வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,

வேங்கை முன்றில் குரவையும் கண்டே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1605பாடல் 1607 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்