நூல்கள்›நற்றிணை›பாடல் 1596

பாடல் 1596

கச்சிப்பேட்டு இளந்தச்சனார்

கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த

குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ

ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்

அகலுள் ஆங்கண் சீறூரேமே;

அதுவே சாலும் காமம்; அன்றியும், . . . .

எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று

கூறுவல் - வாழியர், ஐய! - வேறுபட்டு

இரீஇய காலை இரியின்,

பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே?

முல்லை

← பாடல் 1595பாடல் 1597 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்