நூல்கள்›நற்றிணை›பாடல் 1587

பாடல் 1587

வண்ணக்கன் சோருமருங்குமரனார்

விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,

மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,

கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு

இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்

அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் . . . .

பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்

நல் மலை நாட! - நயந்தனை அருளாய்,

இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்

கடு மா வழங்குதல் அறிந்தும்,

நடு நாள் வருதி; நோகோ யானே. . . . .

குறிஞ்சி

← பாடல் 1586பாடல் 1588 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்