நூல்கள்›நற்றிணை›பாடல் 1584

பாடல் 1584

உலோச்சனார்

வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,

குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,

துனி இல் நல்மொழி இனிய கூறியும்,

சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்

செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! . . . .

உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்

அயினி மா இன்று அருந்த, நீலக்

கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின்

துணை இலை தமியை சேக்குவை அல்லை

நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, . . . .

வானம் வேண்டா உழவின் எம்

கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே

நெய்தல்

← பாடல் 1583பாடல் 1585 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்