நூல்கள்›நற்றிணை›பாடல் 1581

பாடல் 1581

மதுரைப் பெருமருதிள நாகனார்

நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,

பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்

கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்

நல் மலை நாடனை நயவா, யாம், அவன்

நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி, . . . .

நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என்

தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,

பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து,

நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்;

தோடு இடம் கோடாய், கிளர்ந்து, . . . .

நீடினை விளைமோ! வாழிய, தினையே!

குறிஞ்சி

← பாடல் 1580பாடல் 1582 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்