நூல்கள்›நற்றிணை›பாடல் 1576

பாடல் 1576

காப்பியஞ் சேந்தனார்

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;

நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;

மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,

வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;

உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, . . . .

செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,

வருவர் வாழி - தோழி! - புறவின்

பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,

இன் இசை வானம் இரங்கும்; அவர்,

'வருதும்' என்ற பருவமோ இதுவே? . . . .

பாலை

← பாடல் 1575பாடல் 1577 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்