நூல்கள்›நற்றிணை›பாடல் 1573

பாடல் 1573

காமக்கணிப் பசலையார்

தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய

துறுகல் அயல தூ மணல் அடைகரை,

அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்

பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,

'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு . . . .

அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என,

கையறத் துறப்போர்க் கழறுவ போல,

மெய் உற இருந்து மேவர நுவல,

இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்

பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், . . . .

அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?

பாலை

← பாடல் 1572பாடல் 1574 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்