நூல்கள்›நற்றிணை›பாடல் 1564

பாடல் 1564

ஆசிரியர் அறியப்படவில்லை

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது

வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்

திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்

வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே அஃது ஆன்று

அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு . . . .

கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்

பங்குனி விழவின் உறந்தையொடு

உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.

குறிஞ்சி

← பாடல் 1563பாடல் 1565 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்