பாடல் 1562
முதுவெங்கண்ணனார்
சிறு கண் யானைப் பெருங் கை ஈர் - இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் . . . .
மா மலை நாட! - காமம் நல்கென
வேண்டுதும் - வாழிய! எந்தை, வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.
குறிஞ்சி