நூல்கள்›நற்றிணை›பாடல் 1560

பாடல் 1560

ஆலங்குடி வங்கனார்

முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,

கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,

கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,

குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்

கயற்கணம் கலித்த பொய்கை ஊர! . . . .

முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;

நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,

புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென

மலி புனல் பரத்தந்தாஅங்கு,

இனிதே தெய்ய, நின் காணுங்காலே. . . . .

மருதம்

← பாடல் 1559பாடல் 1561 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்