நூல்கள்›நற்றிணை›பாடல் 1559

பாடல் 1559

ஆசிரியர் அறியப்படவில்லை

'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து,

'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே;

'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர்

நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;

அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, . . . .

அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,

இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,

உழையீராகவும் பனிப்போள் தமியே

குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,

ஆடிய இள மழைப் பின்றை, . . . .

வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?

பாலை

← பாடல் 1558பாடல் 1560 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்