நூல்கள்›நற்றிணை›பாடல் 1558

பாடல் 1558

முடத்திருமாறனார்

என் எனப்படுமோ - தோழி! - மின்னு வசிபு

அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,

கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,

பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து

அருளான்கொல்லோ தானே - கானவன் . . . .

சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,

வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,

அழுந்துபட விடரகத்து இயம்பும்

எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?

குறிஞ்சி

← பாடல் 1557பாடல் 1559 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்