நூல்கள்›நற்றிணை›பாடல் 1556

பாடல் 1556

கணி புன்குன்றனார்

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;

உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்

பொன்னும் கொள்ளார், மன்னர் - நன்னுதல்!

நாம் தம் உண்மையின் உளமே; அதனால்

தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, . . . .

என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,

சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்

இன்ன நிலைமைத்து என்ப;

என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.

பாலை

← பாடல் 1555பாடல் 1557 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்