நூல்கள்›நற்றிணை›பாடல் 1555

பாடல் 1555

கபிலர்

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்

பொருத யானை வெண் கோடு கடுப்ப,

வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,

மெல் இயல் மகளிர் ஓதி அன்ன

பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை . . . .

இரந்தோர் உளர்கொல் - தோழி! - திருந்து இழைத்

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்

பயந்து எழு பருவரல் தீர,

நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

குறிஞ்சி

← பாடல் 1554பாடல் 1556 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்